திருடனும் தெனாலி ராமனும்..
தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...
திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...
மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..
சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.
புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..
''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.
''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்
''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..
தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..
''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...
திருடன் பிடிபடுகிறான்....
சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.