0

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை.


தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை.


நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை.


பிறகு ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்?

காலம் இருக்கு கனிவது நிச்சயம்
நேரம் இருக்கு நடப்பது நிச்சயம்
உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்!!!

Post a Comment

 
Top