0

பழமொழிகள் சில...

அகல உழுகிறதை விட ஆழ உழு. 
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 
போதுமென்ற மனமே பொன் செய் மருந்து.  
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. 
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.  
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பசியுள்ளவன் ருசி அறியான். 
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
பதறாத காரியம் சிதறாது. 
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். 
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.  
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.  
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

Post a Comment

 
Top