0
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியொன்று, தங்களது சொத்துக்களை அவர்களது செல்லப்பிராணியான குரங்கு பெயரில் உயிலாக எழுதி வைத்துள்ளனர்.

உத்திரப்பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு மில்லியன் கணக்கில் சொத்துக்கள் உள்ளது.

ஆனால், அவற்றிற்கு உரிமைக் கோர குழந்தைகள் எதுவும் இல்லை. இதனால், குரங்கு ஒன்றை அவர்கள் செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

தங்களின் மறைவுக்குப் பின்னால் அந்தக் குரங்கு ஆதரவு இல்லாமல் அவதிப்படக் கூடாது என நினைத்த அத்தம்பதி, தங்களது சொத்துக்கள் முழுவதையும் அக்குரங்கின் பெயருக்கே எழுதி வைத்துள்ளனர்.

Post a Comment

 
Top