0
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 150 வது படத்துக்கு ஆட்டோ ஜானி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்புதாக செய்திகள் வெளி வந்துள்ளது. அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் என்பதாலும், 150 வது படம் என்பதாலும் அந்த படத்திற்கு பரபரப்பு நாளுக்கு நாள் கூடி வருவதை அனைவரும் அறிவர்.

அந்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கப்போவதாக தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மெகா ஸ்டாருக்காக ஆட்டோ ஜானி என்ற தலைப்பில் ஒரு டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது பற்றி அவர், நான் மெகா ஸ்டாரின் தீவிர ரசிகர். அவரை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தால் இந்த டைட்டில் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து பதிவு செய்து வைத்தேன் என்று கூறிவுள்ளார்.

Post a Comment

 
Top