0
விஜய் நடிக்க வந்த காலகட்டத்தில் தன்னை ரஜினியின் தீவிர ரசிகராக காட்டிக் கொண்டவர்.

சில வருடங்களில்…. அதாவது ஒரளவு வளர்ந்த பிறகு தான் ரஜினியையே மிஞ்சிவிட்டதாக நினைத்தார்.

அந்த எண்ணத்தில்தான் ரஜினியின் சந்திரமுகி படத்தின் சாதனையை, தான் நடித்த சச்சின் படம் முறியடிக்க வேண்டும் என்று விரும்பி, ஆளே இல்லாத தியேட்டருக்கு வாடகை கட்டி சச்சின் படத்தை ஓட்டினார்.

இன்றைக்கு… ரஜினிக்கு எதிரான வேலையை செய்யும் அளவுக்கு துணிந்துவிட்டார் விஜய்.

‘லிங்கா’ பிரச்சினையில் ரஜினியை சில விநியோகஸ்தர்கள் கடுமையானமுறையில் அசிங்கப்படுத்தி வந்தனர்.

அவர்களுக்குப் பின்னால் விஜய் தரப்பு இருப்பதாக படத்துறையில் ஒரு தகவல் அடிபட்டது.

”எங்களுக்கு நஷ்டஈடு தர ரஜினி தயாராக இருக்கிறார். ஆனால், நஷ்ட ஈடு கொடுக்காதீர்கள். நீங்கள் கொடுத்தால் நாங்களும் கொடுக்க வேண்டும் என்று இரண்டு நடிகர்கள் தடுக்கிறார்கள்” என்று கடந்த சில வாரத்துக்கு முன் மீடியாக்களை சந்தித்தபோது, லிங்கா விநியோகஸ்தர்கள் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

அந்த நடிகர்கள் யார் என்று கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள்.

ரஜினியிடம் முட்டுக்கட்டை போட்ட இரண்டு ஹீரோக்களில் ஒருவர்… விஜய் என்று ஊகச் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்தன.

இந்த குற்றச்சாட்டு பற்றி விஜய் இதுவரை எந்த மறுப்பும் சொல்லாத நிலையில், அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், ”லிங்கா படம் சம்பந்தமாக இப்படியொரு விசயம் நடப்பதே விஜய்க்கு தெரியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரை தேவையில்லாமல் இந்த பிரச்சினைக்குள் இழுப்பது நியாயமே இல்லை” என்று கூறினார்.

லிங்கா படம் சம்மந்தமாக என்ன நடக்கிறது என்றே தெரியாத விஜய் செய்த காரியம் என்ன தெரியுமா?

லிங்கா விவகாரத்தில் ரஜினியை அசிங்கப்படுத்திய விநியோகஸ்தர்களை அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் விஜய்.

“உங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டாமென்று நான் சொல்லவே இல்லை” என்று அவர்களை தாஜா பண்ணிய விஜய், அடுத்து செய்ததுதான் ரஜினியை மேலும் அசிங்கப்படுத்திய விஷயம்.

எந்த விநியோகஸ்தர் சங்கத்திலும் உறுப்பினராகாமல், எந்த அமைப்புகளுக்கும் கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்ட லிங்கா விநியோகஸ்தர்களுக்கு எதிர்காலத்தில் யாரும் படங்களை விற்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருக்கிறது.

இவ்விஷயம் விஜய்க்கும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யோ, ‘புலி’ படத்தின் திருச்சி விநியோக உரிமையை லிங்கா விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்படி விலையைக் குறைத்துக் கொடுக்கும்படி சொல்லி இருக்கிறார் விஜய்.

இதன் மூலம்…. ரஜினிக்கு எதிராக விநியோகஸ்தர்களை தூண்டிவிட்டதே விஜய்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.

தன் கட்டளைப்படி ரஜினியை அசிங்கப்படுத்தியவர்களுக்கு கூலியாகவே  புலி படத்தின் விலையைக் குறைத்து அவர்களுக்குக் கொடுக்க முன் வந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

எண்ணம் போல் வாழ்க்கை என்பதை மட்டும் இப்போதைக்கு விஜய்க்கு நாம் சொல்லி வைப்போம்… 

Post a Comment

 
Top