0
சமீபகாலமாக கெட் டு கெதர் பார்ட்டி அதிகமாக பெருகி வருகிறது. தங்களது பள்ளி காலத்து நண்பர்கள், கல்லூரி காலத்து நண்பர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு கெட் டு கெதர் பார்ட்டி ஏற்பாடு செய்து, அதில் அனைவரும் பங்கேற்று, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த பார்ட்டி இப்போது சினிமா பிரபலங்களையும் தொற்றி கொண்டுள்ளது.

ஏற்கனவே 1980களின் திரைநட்சத்திரங்கள், ஆண்டுதோறும் சந்தித்து கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் கூட ராதிகா ஏற்பாடு செய்திருந்த 80களின் நட்சத்திரங்களின் நிகழ்ச்சியில், அன்றைய காலக்கட்ட நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர்.


இந்நிலையில், இப்போது 90 களின் நட்சத்திரங்களின் கெட்-டு-கெதர் பார்ட்டி இந்தாண்டு முதல் துவங்கியுள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் விஜய், சூர்யா, அரவிந்த்சாமி, பார்த்திபன், ஜெயராம், நடிகைகள் ஜோதிகா, சிம்ரன், ரோஜா, மீனா, மகேஸ்வரி, சங்கவி, சங்கீதா, இயக்குநர்கள் ஷங்கர், சுந்தர்.சி. வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த நிகழ்வை, திரைபிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடியதோடு தங்களது மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்த 90களின் நட்சத்திரங்களின் சந்திப்பு இனி ஆண்டு முழுவதும் தொடரும் என தெரிகிறது.


இனி வரும்காலங்களில் 2000 பிரபலங்களும், கெட்-டு-கெதர் பார்ட்டி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

Post a Comment

 
Top