இயக்குனர் ஷங்கர் இதுவரை இயக்கிய படங்களில் டெக்னிக்கலாக மிகவும் பேசப்பட்ட படம் எந்திரன். இந்த படத்தை உருவாக்க படக்குழுவினர் நிறைய கஷ்டப்பட்டதை நாம் அறிவோம்.
தற்போது இப்படத்தை பற்றிய ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தின் கதையை எழுதும் போது கமல்ஹாசனை மனதில் வைத்துக் கொண்டு தான் ஷங்கர் கதை எழுதினார் என்று கேட்டிருப்போம்.
ஆனால் இப்படத்தில் நடிக்க முதலில் ஷங்கர் தேர்வு செய்தவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தானாம். இந்த தகவலை ஐ பட ஷுட்டிங்கின்போது அதில் நடித்த சுரேஷ் கோபியிடம் ஷங்கர் கூறியிருக்கிறார்.
இந்த தகவலை சுரேஷ்கோபி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.
Post a Comment