0
கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நடித்துள்ள உத்தம வில்லன் பாடல் வெளியீட்டு விழா மார்ச் 1ந் தேதி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மீடியாக்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இசை வௌியீட்டு விழாவில், கேரள ஆட்டக்களரி, ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி, நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற இருக்கிறது. இதை அனைத்தையும் நடிகர் கமலே முன்னின்று கவனித்து வருகிறார். மேலும் விழாவையும் அவரே முன்னின்று நடத்த இருக்கிறார். கேரள ஆட்டக்களரி நிகழ்ச்சிக்காக கேரளாவில் இருந்து 30 கலைஞர்கள் வந்துள்ளனர்.

மேலும் படத்திற்கு உத்தம வில்லன் என்று பெயர் வைத்துள்ளதால், பிரபல வில்லன் நடிகர்கள் அனைவரையும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இதில் பங்கேற்பதாக ஒரு தகவலும் உள்ளது.

Post a Comment

 
Top