0
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு நடிகை லுபிதா நியாங்கோ அணிந்து வந்த முத்துக்கள் பதித்த ரூ.93 லட்சம் மதிப்புள்ள கவுனை யாரோ திருடிவிட்டனர்.

ஹாலிவுட் நடிகை லுபிதா நியாங்கோ அண்மையில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு அவர் பிரான்சிஸ்கோ காஸ்டா டிசைனர் கவுன் அணிந்து வந்தார். அந்த கவுனில் 6 ஆயிரம் முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. விழா முடிந்த பிறகு லுபிதா அந்த கவுனை மேற்கு ஹாலிவுட்டில் உள்ள லண்டன் ஹோட்டலில் தான் தங்கியிருந்த அறையில் வைத்திருந்தார்.

ஹாலிவுட் நடிகையின் 6,000 முத்து பதித்த ரூ.93 லட்சம் கவுன் அபேஸ்!

லுபிதா வெளியே சென்ற நேரத்தில் அந்த கவுனை யாரோ திருடிவிட்டனர். அந்த கவுனின் விலை ரூ.93 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லுபிதா தங்கிய ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானவை ஆய்வு செய்யப்பட்டது. கவுன் கடந்த புதன்கிழமை மாலை மாயமாகியுள்ளது.

கென்யாவைச் சேர்ந்த லுபிதா 12 ஸ்லேவ்ஸ் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிக்கைக்கான ஆஸ்கர் விருதை கடந்த ஆண்டு பெற்றார்.

Post a Comment

 
Top