0
என்னை அறிந்தால் படம் வெற்றியா, தோல்வியா? அல்லது இரண்டும் இல்லாத வேறொன்றா? இப்படியெல்லாம் ‘என் உச்சி மண்டையில சுர்’ராகி திரிகிறார்கள் ரசிகர்கள். நிஜ நிலவரம் எதுவாக இருந்தாலும், அஜீத்தின் போக்கில் அநியாயத்துக்கு மாற்றம் என்கிறது கோடம்பாக்கம். என்னை அறிந்தால் சமயத்தில் வீரம் சிவாவிடம் ஒரு கதை கேட்டு, அதை டெவலப் செய்ய சொல்லியிருந்தாராம் அஜீத். மீண்டும் ஏ.எம்.ரத்னம் நிறுவனமே தயாரிக்கும் என்று ஊருக்கு அறிவித்திருந்தாலும், கடந்த வாரம்தான் கைநீட்டி அட்வான்சே வாங்கினாராம் சிவா. அதற்கப்புறம் நிகழ்ந்த மாற்றம் இது என்கிறார்கள். எது?

நாம முன்ன பேசுன கதையை அப்படியே மறந்துட்டு அதே ‘நாட்’ மட்டும் வச்சுகிட்டு ட்ரீட்மென்ட்டை மாற்றிக் கொடுங்க என்று கூறிவிட்டாராம் அஜீத். இதையடுத்து தனது பெரிய டீம்களையெல்லாம் ஒன்று கூட்டி ஆர்ப்பாட்டமாக டிஸ்கஷன் செய்ய விரும்பாத சிவா, தானும் தனது நெருங்கிய நண்பர் ஒருவருமாக சேர்ந்து அமர்ந்து கதைக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இப்போது பேசப்பட்டிருக்கும் ஒரே ஹீரோயின் ஸ்ருதி மட்டும்தான். மற்ற யாரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ். மே மாதத்திலிருந்து நடிக்க வருவதாக கூறியிருக்கிறாராம் அஜீத். வெயில் மண்டைய பொளக்குமே? வெயில் படாத ஊர்ல ஷுட்டிங் வைங்க சிவா சார்…

Post a Comment

 
Top