0
சமூக சேவை மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மலேசிய அரசு, 'டத்தோ' விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில், இதுவரை ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நடிகை மிச்செல்லியோ மற்றும் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் ஏற்கனவே இவ்விருதை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், "நடிகர் ரஜினிகாந்துக்கும் அந்த உயரிய விருதை மலேசிய அரசு வழங்க வேண்டும்..." என்று, அங்குள்ள ரஜினி ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை, ஆன் - லைன் மூலம் மலேசிய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Post a Comment

 
Top